districts

img

நூறாண்டுக்கு மேல் பயன்படுத்தி வந்த 4 சாலைகளை ரயில்வே நிர்வாகம் மூடல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 12 - திருச்சி மேலகல்கண்டார்கோட்டை, கீழ கல்கண்டார்கோட்டை, மாஜி இராணுவ காலனி, அம்பிகாபுரம், மகாலெட்சுமி நகர்,  நாகம்மை வீதி, மூகாம்பிகை நகர், மாருதி நகர், விவேகானந்தா நகர், ஆலத்தூரில் உள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில்வே தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற  தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவி கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பயன் படுத்தி வந்த 4 சாலைகளை ரயில்வே நிர்வா கம் அடைத்துள்ளது. சிபிஎம் கையெழுத்து இயக்கம் இதைக் கண்டித்தும், ரயில்வே பணி மனை, ரயில்வே மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வசதியாக சுரங்கப் பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். ரயில்வே நிர்வாகம் ரயில்வே காலனி பகுதி யில் செய்து கொண்டிருக்க கூடிய வேலை யின் வரைபடத்தை வெளிப்படை தன்மை யுடன் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  பொன்மலைக் குழு, அனைத்து நலச்சங்கங்கள்,  வியாபாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கடந்த 3 நாட்களாக பொன்மலை பகுதியில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.  இந்நிலையில் பொதுமக்களிடம் பெறப் பட்ட கையெழுத்து பதாகையை, திருச்சி  ரயில்வே கோட்ட மேலாளரிடம் ஒப்படைக்க  சிபிஎம் பொன்மலை பகுதி செயலாளர் விஜ யேந்திரன் தலைமையில் மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், கார்த்தி கேயன், மணிமாறன், மாவட்டக் குழு உறுப்பி னர் மகேந்திரன் மற்றும் குடியிருப்போர் நலச்  சங்கத்தினர் வெள்ளியன்று ஊர்வலமாக ரயில்வே கோட்ட மேலாளர் அலுவல கத்திற்கு வந்தனர். கோட்ட மேலாளர் உறுதி அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு  மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கோட்ட மேலாளரை சந்தித்து கையெழுத்து பெற்ற பதாகையை ஒப்படைத்தனர். பதாகையை பெற்றுக் கொண்ட அவர் பொதுமக்கள் சென்று வருவதற்கான வழி யுடன் கூடிய வரைபடம் விரைவில் வெளியிடப் படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து  அனைவரும் கலைந்து சென்றனர்.