புதுக்கோட்டை, ஆக.8-
புதுக்கோட்டை வட்டாரம், திருக்கோகர்ணம், கல்யா ணராமபுரம் அங்கன்வாடி மையத்தில், தீவிர மிஷன் இந்திர தனுஷ் 5.0 தடுப்பூசி முகாமினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா திங்கள்கிழமை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், இது 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார் களுக்கு, விடுபட்ட தடுப்பூசி தவணைகளை செலுத்தும் சிறப்பு முகாம். இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் முதல் சுற்று ஆகஸ்ட் 7 முதல் 12 வரையிலும், 2-வது சுற்று செப்டம்பர் 11 முதல் 16 வரையிலும், 3-வது சுற்று அக்டோ பர் 9 முதல் 14 வரையிலும் செயல்படுத்தப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்க ளிலும் 0 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப் பட்டுள்ள தடுப்பூசிகள் முழுமையாக இலக்கீட்டினை அடையப் பெற்றுள்ளதை கணக்கெடுத்தும், தடுப்பூசி சேவைகள் ஏதும் விடுபட்டுள்ளனவா என கணக்கெடுத் தும், மிஷன் இந்திர தனுஷ் 5.0 என்ற சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளி லும் இவை நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 0 முதல் 5 வயதிற்குட்பட்ட 3,904 குழந்தைகளும், 494 கர்ப்பிணித் தாய் மார்களும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற உள்ளனர். இம்முகாம் 1,240 மையங்களில் நடைபெற உள்ளது” என்றார்.