districts

img

நூறு நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு

கும்பகோணம்,  மே 11- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கத்தின் சார்பாக நூறு நாள் வேலை கேட்டு, தமிழகம் முழுவதும் மே 7 முதல் மே 14 வரை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு  கொடுக்கும் இயக்கம் நடத்தப் படுகிறது. இதனையடுத்து தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை  சங்கத்தின் தஞ்சா வூர் மாவட்டம் திருவிடைமரு தூர் வடக்கு மற்றும் தெற்கு  ஒன்றியம் சார்பில் திரு விடைமருதூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் வெள்ளிக்கிழமை மாலை வட்டார வளர்ச்சி அலு வலரிடம் நூறு நாள் வேலை  கேட்டு கோரிக்கை விண் ணப்பம் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் திரு விடைமருதூர் வடக்கு ஒன்றிய தலைவர் ஜெசிந்தா,  தெற்கு ஒன்றிய தலைவர் அனிதா, சங்கத்தின் மாவட்ட  பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கும்பகோணம் கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கப் பட்டது. இதில் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பி னர் பழ.அன்புமணி, கும்ப கோணம் ஒன்றிய நகர பொ றுப்பாளர்கள் தாமோதரன் மீரா, பாருக் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.