districts

img

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்

துறையூர், மார்ச் 23- திருச்சி மாவட்டம், துறையூர் ரவுண்டானா அருகில் பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்திற்கு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாநில இணைச் செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜமாணிக்கம், மாவட்ட துணைத் தலைவர் எ.மணிவேல், பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.லோகநாதன் ஆகியோர் பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு பாலின் கொள்முதல் விலையை ரூ.42-லிருந்து ரூ.51-ஆக உயர்த்தி தர வேண்டும். முன்பு வழங்கியதுபோல கால்நடை தீவனம் மானிய விலையில் வழங்கப்பட வேண்டும். கறவை மாடுகளுக்கு இலவச காப்பீடு செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

;