districts

img

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்தனர்

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.1.06 கோடி மதிப்பீட்டில்  மேம்படுத்தப்பட்ட மயக்க மருந்துக்குப்பின் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் அறுவைச் சிகிச்சைக்குப்பின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மா.சுப்பிரமணியன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் புதன்கிழமை திறந்து வைத்தனர். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை தலைவர்  தி.சி.செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.