புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் வேகுப்பட்டி ஊராட்சியில் ஏனமாரியம்மன் கோவில் அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு உண்ணும் கூடத்தினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி, பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், வட்டாட்சியர் சாந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.