districts

img

சிபிஎம் அரசியல் விளக்கப் பொதுக் கூட்டம்

புதுக்கோட்டை, ஜன.27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியக்குழு சார்பில் தோழர் என்.சங்க ரய்யா நினைவு கல்வெட்டு திறப்பு விழா, கட்சியின் வளர்ச்சி நிதியளிப்பு விழா மற்றும்  அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் பரம்பூ ரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் கிளைச் செயலா ளர் பி.நடராஜன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.சி.ரெங்க சாமி, எம்.ஜோஷி, ஏ.தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் சிறப்புரையாற்றினார். அவரிடம் கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ.1,50,100 அளிக்கப்பட்டது. கல்வெட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் திறந்து வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.சண் முகம், ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, புதுக்கோட்டை நகரக்குழு உறுப் பினர் பழ.குமரேசன் ஆகியோர் பேசினர்.