அறந்தாங்கி, மே 24-
புதுக்கோட்டை மாவட்ட அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்ட குழுக் கூட்டம் இணைச் செயலாளர் வழக்கறிஞர் கே.எம்.எஸ்.செந்தில்குமார் தலைமையில் அறந்தாங் கியில் நடைபெற்றது. மாவட்டக் குழு கூட்டத் தில் மாவட்ட துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் கள் குழந்தைவேலு, ஜான்சி மகாராணி, மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அலாவுதீன், மாவட்டப் பொருளாளர் வழக்கறிஞர் சேக்ரா வுத்தர் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத் தில் இயங்கும் நீதிமன்றங் களில் வழக்காடிகள், வழக் கறிஞர்கள் மற்றும் நீதி மன்ற ஊழியர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் மற்றும் அதை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.