districts

    புதுக்கோட்டை ‘மாவட்டம், அறந்தாங்கியில் பெண் வெட்டிக்கொலை

புதுக்கோட்டை, ஆக.24-

      புதுக்கோட்டை ‘மாவட்டம், அறந்தாங்கி எல்.என்.புரம்  நவரத்தின நகரைச் சேர்ந்தவர் பிரம்மன் மனைவி சுப்பம்மாள் (45). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுப்பம்மாளுடன் அவரது மகன் அருண் பாண்டி வசித்து வருகிறார். கணவன்-மனைவிக்கு இடையே  ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுப்பம்மாள் கணவனை பிரிந்து தனியாக நவரத்தின நகரில் வசித்து வந்தார்.  

     சம்பவத்தன்று கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு  காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சுப்பம்மாள் இறந்து கிடந்தார். இதையடுத்து வீட்டிற்கு வந்த சுப்பம்மாளின் மகன் அருண்பாண்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுப்பம்மாளை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து தக வல் அறிந்த அறந்தாங்கி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பம்மாள் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.