புதுக்கோட்டை, பிப்.14- போதையற்ற தமிழ் நாட்டை உருவாக்கக்கோரி புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழ மையன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் ஒருகோடி பேரிடம் கையெ ழுத்துப் பெறும் இயக்கத் ்தின் ஒருபகுதியாக புதுக் கோட்டையிலும் கையெழு த்து இயக்கம் நடைபெற்றது. இயக்கத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மகாதீர் தலைமை வகித்தார். மருத்துவர் எஸ்.எம்.முருகசுந்தரம் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். கையெழுத்து இயக் கத்தை ஆதரித்து வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ஏ.ஸ்ரீதர், துரை.நாராயணன், அறிவி யல் இயக்க மாநிலச் செயலா ளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், முன்னாள் தலைமை ஆசிரி யர் அ.மணவாளன், தமுஎகச மாவட்டப் பொருளாளர் கி.ஜெயபாலன் உள்ளிட் டோர் பேசினர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. குமாரவேல் நிறைவுரை யாற்றினார். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட் டம் தலைஞாயிறு ஒன்றி யத்தில் நடைபெற்ற கையெ ழுத்து இயக்கத்திற்கு ஒன்றி யத் தலைவர் ஆர்.கண்ணன் தலைமை வகித்தார். தலை ஞாயிறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமிழ் மணி கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதில் நாகை மாவட்டத் தலைவர் பி.எம்.நன்மா றன், மாவட்டச் செயலாளர் டி.அருள்தாஸ் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.