புதுக்கோட்டை, ஜூலை 27 -
புதுக்கோட்டை மாவட்ட ஆறாவது புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர்மன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
புத்தகத் திருவிழாவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்துகின்றன. ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 120 அரங்குகளில் லட்சக்க ணக்கான புத்தகங்கள் வாசகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை பத்து மணியளவில் நடை பெறும் தொடக்க விழாவிற்கு ஆட்சியரும், புத்தகத்திரு விழாக்குழுத் தலைவருமான ஐ.சா.மெர்சி ரம்யா தலைமை வகிக்கிறார். மாவட்டக் காவல் கண்காணிப்பா ளர் வந்திதா பாண்டே முன்னிலை வகிக்கிறார். சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து சிறப்பு ரையாற்றுகிறார். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பி னர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவ லர்கள், அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
மாலையில் நடைபெறும் விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் எஸ்.தினகரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.