districts

img

பல்லாங்குழி சாலையை சீரமைத்திடுக! புதுக்குடி கிராம மக்கள் கோரிக்கை

திருவாரூர், டிச.16 -  கொரடாச்சேரி செல்லும் சாலை, பல்லாங் குழி சாலையாக உள்ளதால் சாலையை சீர்  செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே  உள்ள புதுக்குடி கிராமத்தில் இருந்து நெய்க்குப்பை, ஆப்பாவூர் வழியாக கொர டாச்சேரி செல்லும் 8 கி.மீட்டர் சாலை உள்ளது. இச்சாலை கடந்த 2018 ஆம் ஆண்டு  புதிய தார்ச் சாலையாக போடப்பட்டதாக தெரிகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இச்சாலை குண்டும், குழியுமாக பல்லாங் குழி சாலையாக மாறி, நடந்துகூட போக முடியாத வகையில் உள்ளது.  தற்போது இது பல்லாங்குழி சாலை யாக மாறியுள்ளதால், இப்பகுதி கிராமப்புற  மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள மின் விளக்கு கள் இரவு நேரங்களில் விட்டு விட்டு எரி கிறது. இதனால் பணி முடிந்து வீடு திரும்பும்  பெண்கள் மிகவும் அச்சத்துடன் வருகின்ற னர்.  எனவே சம்பந்தப்பட்ட அரசுத் துறை நிர்வாகத்தினர், மக்களின் நீண்ட நாள் கோரிக் கையான  புதுக்குடியில் இருந்து நெய்க்குப்பை  வரை மற்றும் ஆப்பாவூரில் இருந்து கொர டாச்சேரி வரை புதிய சாலை அமைக்க வேண்டும். சாலையோர மின் கம்பங்களில்  உள்ள மின் விளக்குகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி யுள்ளனர்.