புதுக்கோட்டை, பிப்.9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் சார்பில் கட்சி வளர்ச்சி நிதியளிப்பு, அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரிமளம் எட்டாம் மண்டகப்படியில் நடை பெற்ற கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஆர். வி.ராமையா தலைமை வகித்தார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராம லிங்கம் சிறப்புரையாற்றினார். அவரிடம் கட்சி யின் வளர்ச்சி நிதியாக ரூ.1,50,100 வழங்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். சங்கர், ஜி.நாகராஜன், எஸ்.ஜனார்த்தனன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.முகமதலி ஜின்னா உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.அடைக்கப்பன் வரவேற்க, ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.மணி நன்றி கூறினார்.