மயிலாடுதுறை, ஆக.31 - மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரியின் 52 ஆம் ஆண்டு விளையாட்டு விழா வியாழனன்று நடை பெற்றது. கல்லூரி முதல்வர் எஸ்.ஜான்சன் ஜெயக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புதுச்சேரி மாநில போக்கு வரத்துத் துறை அமைச்சர் முனைவர் சந்திரபிரியங்கா வெற்றி பெற்ற மாணவி களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான கல்விக் கழக தலைவர் குணாளன் பாக்யராஜ் சிறப்புரையாற்றி னார். உடற்கல்வி இயக்கு னர் ஜெ.ஸ்ரீதர் தங்கதுரை, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.