புதுக்கோட்டை/திருத்துறைப்பூண்டி, நவ.26 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக் கோட்டை மாவட்டக்குழு சார்பில் முது பெரும் பொதுவுடமை இயக்கத் தலை வர், தகைசால் தமிழர் தோழர் சங்க ரய்யாவுக்கு சனிக்கிழமை புதுக்கோட் டையில் புகழஞ்சலி நிகழ்ச்சி நடை பெற்றது. புதுக்கோட்டை அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்வுக்கு தமுஎகச மாவட்டத் தலை வர் ராசி.பன்னீர்செல்வன் தலைமை வகித்தார். ‘சங்கரய்யாவின் எழுத்தும் பேச்சும்’ என்ற தலைப்பில் மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன், ‘பொதுவுடமை இயக்க வரலாற்றில் சங்கரய்யா’ என்ற தலைப்பில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், ‘சுதந்திரப் போரில் சங்கரய்யா’ என்ற தலைப்பில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகி என். கண்ணம்மாள் ஆகியோர் உரையாற்றி னர். ‘தமுஎகச உருவாக்கத்தில் சங்க ரய்யா’ என்ற தலைப்பில் மாவட்டச் செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன், ‘சட்டமன்றத்தில் சங்கரய்யா’ என்ற தலைப்பில் புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனர் எஸ்.இளங்கோ, ‘இதழ் பணி யில் சங்கரய்யா என்ற தலைப்பில் சினிமா பாடலாசிரியர் இரா.தனிக் கொடி, பத்திரிகையாளர் சு.மதியழகன் ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் சு.பீர்முகமது வரவேற்க, பொருளாளர் கி.ஜெயபாலன் நன்றி கூறினார். திருத்துறைப்பூண்டி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் சுதந்திர போராட்ட வீரர் என்.சங்கரய்யா நினைவேந்தல் நிகழ்வு மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. கிளைத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் புரட்சிதாசன் வரவேற்றார். பொதுவுடமை இயக்க வர லாற்றில் சங்கரய்யா என்ற தலைப்பில் எழுத்தாளர் - தீக்கதிர் நாளிதழின் திருச்சி மண்டல பொறுப்பாளர் ஐ.வி.நாகராஜன் உரையாற்றினார். கவிஞர் தமிழ்ஒளி வாழ்வும் கலை இலக்கிய பணியும் என்ற தலைப்பில் மாநில துணை பொது செயலாளர் கவிஞர் களப்பிரன் உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவி ஞர் மா.சண்முகம் கவிதைகளை தொகுத்து வழங்கினார். நகையரசு.அழகரசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொருளாளர் தமிழ்ச் செல்வன் நன்றி கூறினார். நிகழ்வில் நகர்மன்ற துணைத் தலைவர் ஜெயபிர காஷ், ஒன்றிய கவுன்சிலர் வேதரெத்தி னம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.