புதுக்கோட்டை, அக்.25 - அம்ரீத் பாரத் திட்டத்தில் புதுகை ரயில் நிலையத்தை மேம்படுத்து வதற்கு ரூ.6.89 கோடியிலான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இந்நி லையில், அதன் மாதிரி வரைபடத்தை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஆயிரம் ரயில் நிலையங்களை மேம்படுத்த ஒன்றிய ரயில்வே துறை முடிவு செய்தது. இதில், தமிழ்நாட்டில் 60 ரயில் நிலை யங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தொடக்கத்தில் அந்தப் பட்டியலில் புதுக் கோட்டை இல்லாத நிலையில், மாநிலங் களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல் லாவின் முயற்சியால், அதில் புதுக் கோட்டையும் சேர்க்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ரூ.6.89 கோடி யில் முதல் கட்டப் பணிகள் மேற்கொள்ள கடந்த ஏப்ரலில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. புதிய நுழைவாயில், ரயில் நிலையத்தில் நீண்ட நடை மேடை, அதற்கான மேற்கூரை, எல்இடி விளக்குகள், புதிய கட்டடங்கள், மரக் கன்றுகள் நடுவது, பொலிவூட்டும் பணி கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாக னங்கள் நிறுத்தம், ரயில்வே கட்டடங் களில் வண்ண ஓவியங்கள் வரைவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்நிலையில், ரயில் நிலையத்தின் பொலிவூட்டப்படும் முகப்பு பற்றிய படத்தை தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ளது. தற்போதுள்ள முகப்புடன், மேம்படுத்தப்படவுள்ள முகப்பையும் இணைத்து தெற்கு ரயில்வேயின் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. லிப்ட் வசதி முதல் நடைமேடையில் இருந்து இரண்டாவது நடைமேடைக்கு படி களில் ஏறிச் செல்ல வேண்டியுள்ள நிலை யில், முதியவர்கள், உடல்நலக் குறை பாடு உடையவர்களுக்காக மேம்பால நடைமேடைக்கு அருகே மின் தூக்கிகள் (லிப்ட்) அமைக்கப்படவுள்ளன. இதற் காக குழி தோண்டும் பணிகள் முடிந் துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.