புதுக்கோட்டை, ஜூலை 5-
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வில் பல்வேறு எழுத்தாளர்கள், கவிஞர்களின் நூல்கள் வெளி யிடப்பட்டு வருகின்றன.
6 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் 9 வது நாளான சனிக் கிழமை காலை அமர்வில் எழுத்தாளர் விழியனின் ‘மலைப்பூ’ என்ற நூல் வெளியிடப்பட்டது. விழாவிற்கு கவிஞர் மு.முருகேஷ் தலைமை வகித்து புத்த கத்தை வெளியிட்டார். முதல் பிரதி களை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்க டேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உதய ரிஸ்னியா, வி.எஸ்.கவிசாகர், அ.அ.அட்சயா, புதுக்கோட்டை ராணி யார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பா.உ.தியானோ ஆகியோர் பெற்றுக் கொண்டு, நூல் குறித்து ஆசிரி யருடனான கலந்துரையாடல் நிகழ்வி லும் பங்கேற்றனர்.
நூலை அறிமுகம் செய்து கவிஞர் தங்கம்மூர்த்தி பேசினார். பதிப்பாளர் நாகராஜன், மொழிபெயர்ப்பாளர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் வரவேற்க, நூலாசிரியர் விழியன் ஏற்புரை வழங்கினார்.
நூலை அறிவி யல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கி னார். வெள்ளிக்கிழமை மாலை நிகழ்வில் தன்னார்வ பயிலும் வட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் எழுதிய ‘ஒரு ஆணின் பிரசவம்’ என்ற நூலை கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் வெளியிட, கவிஞர்கள் நா. முத்துநிலவன், ஜீவி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.