districts

img

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பூம்புகார் - கல்லணை சாலை தடுப்பு நீக்கம்

கும்பகோணம், நவ.26 - பொதுமக்களின் கோரிக்கையை  ஏற்று பூம்புகார் - கல்லணை சாலை தடுப்பை நீக்கியதற்கு சிபிஎம்  கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜனுக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே பூம்புகார் - கல்லணை சாலை புளியஞ்சேரி சந்திப்பில், விக்கிரவாண்டி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை சுவாமிமலைப் பகுதிவாழ் மக்கள், மாணவர்கள்  என பல்வேறு தரப்பட்ட பொது மக்கள் சென்று வருவதற்கு வசதி யாக இருந்தது. இப்பாதையில் தடுப்பு நீக்கி சாலை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள்,  ஓட்டுநர்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஒன்றிணைந்து பூம்புகார் - கல்லணை சாலை  தடுப்பு நீக்கும் குழு மூலம்  கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடத்தினர். ஆனால் அப்பகுதியில் சாலை யின் குறுக்கே பெட்டிவடிவ சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. இது மிக குறுகிய பாதையாக இருப்பதால், அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ், இலகுரக வாக னங்கள் சென்று வர போதுமான பாதை இல்லை. இதனால் அருகி லேயே மற்றொரு பெட்டி வடிவ பாதை வேண்டுமென தேசிய நெடுஞ் சாலை (நகாய்) திட்ட தஞ்சை மாவட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை  வைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை.  இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்  தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராம கிருஷ்ணன், 2023 செப்டம்பர் 10 அன்று கும்பகோணம் வந்தபோது அவரிடம் இப்பிரச்சனை குறித்து  கூறப்பட்டது. அவரும் உடனடியாக சாலையைப் பார்வையிட்டு நகாய் திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினருமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின்  கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜனை தொலை பேசியில் தொடர்பு கொண்டு கோரிக் கைகளை எடுத்துரைத்தார்.  

சிபிஎம் மத்தியக் குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் பரிந்துரை யின் பேரில், பூம்புகார் கல்லணை சாலை தடுப்பு நீக்கும் குழுவின் தலைவர் கோதண்டபாணி, முன்னாள்  வட்டாட்சியரும் சிபிஎம் உறுப்பி னருமான ஆர்.ராஜகோபாலன் தலைமையில், 2023 செப்.12 அன்று  கோவை சென்று நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சந்தித்து விவரங்களை தெரி வித்தனர்.  பின்னர் கோவை நகாய் திட்ட உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரி டம் பேசி, கோரிக்கைகள் குறித்து ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சரிடம் தெரிவித்து, இதனை நிறைவேற்றித் தருமாறு கடிதம் அனுப்பினார் பி.ஆர்.நடரா ஜன் எம்.பி.. இதனைத் தொடர்ந்து, மக்க ளின் கோரிக்கையை ஏற்று சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பரிந்துரையின் பேரில்,  சம்பந்தப்பட்ட பூம்புகார் கல்லணை சாலையின் தடுப்பு  நீக்கப்பட்டது. மேலும், அந்த இடத் தில் ஏற்கனவே அமைக்கப்படும் சுரங்கப் பாதைக்கு பக்கத்திலேயே  2-வது பெட்டக வடிவ 10X10 பாதைக் கான மண் தோண்டும் பணி துவங்கி  நடைபெற்று வருகிறது. நகாய் ஒப்பந்ததாரரின் டெக் னிக்கல் மேற்பார்வையாளரும், 2-வது பெட்டகப் பாதைக்கான பணி  துவங்கி விட்டதை உறுதிப்படுத்தி னார். கோரிக்கைகள் குறித்து சம்பந் தப்பட்ட அதிகாரி மற்றும் அமைச்சர் களுக்கு பரிந்துரை செய்த சிபிஎம்  கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவ லர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.