மெலட்டூரை அடுத்த சுரைக்காயூர் வடக்குத் தெருவில் கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வராததை கண்டித்தும், மின் கம்பி தாழ்வாக செல்வதை சீரமைக்க கோரியும் அப்பகுதியை பொது மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மெலட்டூர் - திருக்கருக்காவூர் மெயின் சாலையில் நடந்த மறியலில் 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஈடுபட்டனர். பின்னர் ஊராட்சி நிர்வாகம், மெலட்டூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.