அரியலூர் மாவட்டம், முத்துவாஞ்சேரி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.35.88 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் பயனாளி ஒருவருக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார்.