தஞ்சாவூர், டிச.4 - தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன், திருப்பழனம் ஊராட்சியை இணைக்கும் முயற்சியை கை விட வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில், திங்கள் கிழமை பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற் றது. இதில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றார். அப்போது திருவைாறு அருகே திருப்பழனம் கிரா மத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர் தலை மையில், ஒன்றியத் தலைவர் அறிவழகன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் ஒன்றை மனு கொடுத்தனர். அந்த மனுவில், “திரு வையாறு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் திருப்பழனம் கிராம ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயிகள் அதிகம் பேர் வாழ்கின்றனர். விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாகும். ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடை வளர்ப்பும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் திருவை யாறு பேரூராட்சியை நகராட்சி யாக தரம் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள திருவை யாறில், திருப்பழனம் ஊராட்சியை இணைத்தால், முப்போகம் விளையும் நஞ்சை நிலம் பறிக்கப்படும் அபாயம் உள்ளது. நகராட்சியாக மாற்றப்பட் டால், கிராம மக்களின் சொத்து வரி, வீட்டுவரி, தண்ணீர் வரி போன்றவை பல மடங்கு உயர்ந்துவிடும். கிராம மக்க ளின் வாழ்வாதாரமாக உள்ள நூறு நாள் வேலை திட்டம் பறி போகும் நிலை ஏற்படும். எனவே திருப்பழனம் கிராமத்தை திரு வையாறுடன் இணைப்பதை பொதுமக்கள் ஏற்கவில்லை. இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது.