districts

img

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம்

திமுகவின் கும்பகோணம் மாநகரம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நாஞ்சில் பா.சம்பத், வடக்கு மாவட்ட கழக செயலாளர் சு.கல்யாணசுந்தரம்  ஆகியோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், கழக துணை செயலாளர்கள் கோவி.அய்யாராசு,பரிதா சுல்தான் ஆகியோர் பேசினர்.