திருச்சிராப்பள்ளி, பிப்,22- அரசு பொது இன்சூ ரன்ஸ் நிறுவனங்களை தனி யார்மயபடுத்தும் முயற்சி களை கைவிட வேண்டும், எளிய மக்களுக்கும் இன்சூ ரன்ஸ் சேவை கிடைக்கும் வகையில் சிறு, குறு நகரங்க ளில் அமைந்துள்ள பொது இன்சூரன்ஸ் அலுவலகங் களை மூடுவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பொது இன்சூரன்ஸ் ஊழி யர்கள் வியாழனன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது இன்சூரன்ஸ் நிறு வனங்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நலச் சங்கங்களின் கூட்ட மைப்பின் சார்பில் திருச்சி - கன்டோன்மெண்டில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூ ரன்ஸ் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. அனைத்து தொழிற்சங்கங் கள் மற்றும் நல சங்கங்களைச் சார்ந்த தலைவர்கள் பேசினர்.