மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 9 நபர்களுக்கு மோட்டார் தையல் இயந்திரம், மடக்கு சக்கர நாற்காலி ஆகியவற்றை வழங்கினார்.