அறந்தாங்கி, டிச.23 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆளப்பிறந்தான் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்பட்டி குடியிருப்பு பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. தற்போது, அந்த தொட்டியின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து விரிசல் ஏற்பட்டதோடு நீர் கசிந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. பொது மக்கள் நடமாட்டம் உள்ள அப்பகுதியில் உள்ள இந்த தொட்டி எந்நேரத்தில் விழும் நிலை உள்ளது. அசம்பாவிதம் நிகழும் முன் உடனே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இடிந்து விழும் நிலையில் உள்ள இத்தொட்டி குறித்து, ஊராட்சி ஒன்றிய அதி காரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் தற்போது வரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.