districts

மனவளர்ச்சி குன்றிய இருவருக்கு அரசு சார்பில் வீல் சேர் வழங்கல்

தஞ்சாவூர், ஆக.31-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக  உதவியாளர் அருள்ராஜ் தலைமையில், பட்டுக் கோட்டை கோட்ட மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.  இதில், பட்டுக்கோட்டை, பேராவூரணி  பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாவட்ட துணைத்  தலைவர் ஏ.மேனகா, மாவட்ட துணைச் செய லாளர் சி.சந்திர பிரகாஷ், முன்னாள் மாவட்ட  துணைத்தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி, மதுக்கூர் ஒன்றிய தலைவர் எம்.பால சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை ஒன்றிய  செயலாளர் ஏ.வினோத்குமார் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  இதில், கோட்டாட்சியரின் நேர்முக உதவி யாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “கோவில் உள்ளிட்ட புனித தலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி யாக வீல் சேர் வசதி அமைத்து தர வேண்டும்.  பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளி களுக்கான கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும்.  தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் பணித்தள பொறுப்பாளர் வேலை  வழங்க வேண்டும். அரசு போக்குவரத்து கழக  பேருந்துகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்ய ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின்  முயற்சியில் மதுக்கூர் ஒன்றியம் நடராஜனின் மனவளர்ச்சி குன்றிய மகள்கள் திவ்யா, லாவண்யா ஆகியோருக்கு பேட்டரி வீல் சேர் வழங்கப்பட்டது.