தஞ்சாவூர், நவ.21 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவ லகத்தில் பருவ மழையினால் வீடுகள் சேதமடைந்த பொது மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு, பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையினால் பல இடங்களில் வீடுகள் சேதமடைந்தன. அந்த வகையில், பேராவூரணி பகுதி யில் உள்ள கூரை வீடு, ஓட்டு வீடு என மொத்தம் 12 வீடுகள் மழையினால் சேதமடைந்தன. பகுதி சேதம் அடைந்த கூரை வீடுகளுக்கு ரூ.4,100, முழு மையாக சேதமடைந்த கூரை வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம், பகுதி சேதம் அடைந்த ஓட்டு வீடுகளுக்கு ரூ.5,200 என மொத்தம் ரூ.58,900-ஐ பயனாளிகளுக்கு பேராவூரணி எம்.எல்.ஏ நா. அசோக்குமார் வழங்கினார்.