புதுக்கோட்டை, டிச.15:- வன்கொடுமையால் கொலையுண்டவரின் வாரி சுக்கு சமையலர் நிலையில் தற்காலிக பணிநியமன ஆணையினை புதுக் கோட்டை மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா வெள் ளிக்கிழமை வழங்கினார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 திருத்த விதிகள் 2016-இன் கீழ் புதுக் கோட்டை மாவட்டம், உடை யாளிப்பட்டி காவல் நிலைய குற்ற எண்ணின் படி, வன்கொடுமையால் கொலையுண்ட வீ.விஷ்ணு குமார், என்பவரது வாரிசு தாரரும் தந்தையுமான ஆ.வீரமுத்து என்பவருக்கு கிள்ளுக்கோட்டை, அரசு ஆதிதிராவிடர் நல மாண வர் விடுதியில் சமையலர் நிலையில், விதிகள் 12 (4)-ன் படி தற்காலிக பணிநியமன ஆணையினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வெள்ளிக்கிழமை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, மாவட்ட ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.