districts

img

தரங்கம்பாடி தெரசா பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

மயிலாடுதுறை, அக்.21- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தூய தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி சிசிலி தலைமை வகித்தார்.  பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் நிவேதா எம்.முருகன், 255 மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி உரையாற்றினார். முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் சித்திக், தரங்கம்பாடி பேரூ ராட்சி தலைவர் சுகுணசங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.