அரியலூர், டிச.23 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி யில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் முதலாமாண்டு பயிலும் மாணவ - மாணவி களுக்கு அரசின் விலை யில்லா மிதிவண்டிகள் வழங் கும் விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா தலைமையில், ஜெயங் கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் 832 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, உட்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, கங்கை கொண்ட சோழ புரம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆதி திராவிட மேல்நிலைப் பள்ளி, வெத்தியார் வெட்டு ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மகிமைபுரம் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி, கல்லாத்தூர் தண்டலை அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 8 பள்ளிகளைச் சேர்ந்த 832 மாணவ-மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.