கும்பகோணம், பிப்.17- தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாச்சியார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடை பெற்றது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லி வர வேற்புரை ஆற்றினார். மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரும் அரசு தலைமை கொறடாவுமான முனை வர் கோவி.செழியன், திருவிடைமருதூர் ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாச்சியார்கோவிலில் 806 மாணவர்களுக்கும், 1155 மாணவிகளுக்கும், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 பள்ளிகளைச் சேர்ந்த 1961 மாணவ-மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டி கள் வழங்கப்பட்டன.