கும்பகோணம், மார்ச் 17- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி கள், அரசு வழங்கும் நலத் திட்டங்களை பெறுவதற்கு, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் சங்கம் பெரு முயற்சி எடுத்து பல மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங் களை பெற்று கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஊன முற்ற மாற்றுத்திறனாளி களுக்கு வாழ்வாதாரத்தை காத்திடவும், அவர்கள் வெளி யில் சென்று வரவும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் சங்க கும்பகோ ணம் ஒன்றியம் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு முறையாக விண் ணப்பம் அனுப்பப்பட்டது. அதில் ஐந்து பேருக்கு நான்கு சக்கர மோட்டார் வாகனத்தை, கும்பகோணம் சட்டமன்ற அலுவலகத்தில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பழ. அன்புமணி முன்னிலை வகித்தார்.