districts

img

செம்பனார்கோவில், தில்லையாடியில் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கல்

மயிலாடுதுறை,  செப்.26 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசு  உதவிபெறும் சம்பந்தம் மேல் நிலைப் பள்ளி மற்றும் அரசி னர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி  வழங்கும் விழா செவ்வா யன்று நடைபெற்றது. சம்பந்தம் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். மயி லாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராம லிங்கம், பூம்புகார் தொகுதி சட்டப் பேரவை  உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஆகி யோர், சம்பந்தம் பள்ளி மாணவர்கள் 181  பேருக்கும், அரசினர் பெண்கள் மேல்நிலைப்  பள்ளி மாணவிகள் 156 பேருக்கும் விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை யாற்றினர். இதேபோல், பொறையார் அருகே தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு  மேல்நிலைப் பள்ளியில் 42 மாணவ, மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கிப் பேசி னார். ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கராஜ் தலைமை வகித்தார்.