districts

img

முடக்குவாதம் பாதித்த சிறுமிக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்கல்

தஞ்சாவூர், மார்ச் 2-  தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள, அரசர் மேல்நிலைப் பள்ளியில் மாற் றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அனைத்துத் துறை கள் ஒருங்கிணைந்து நடத் திய, மாற்றுத் திறனாளி களுக்கான மாபெரும் மருத் துவ முகாம் மாவட்ட ஆட்சியர்  தீபக் ஜேக்கப் தலைமை யில் சனிக்கிழமை நடை பெற்றது. முகாமில் 150-க்கும் மேற் பட்ட, மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு யுடிஐடி  அட்டை, உதவி உபகரணங் கள், வங்கி கடன், இதர துறை சார்ந்த நலத்திட்ட உத விகள், தமிழ்நாடு உரிமை கள் திட்டம் தொடர்பான மாற்றுத்திறனாளிகள் கணக் கெடுப்பில் பதிவு செய்யாத வர்கள், பதிவு செய்து பயன்  பெற்றனர். மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறப்பு குழந்தைக்கு, சிறப்பு சக்கர நாற்காலியும், 65 பேருக்கு மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடை யாள அட்டையும் வழங்கப் பட்டது. இதில் திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)  எஸ்.சங்கர்,  மாற்றுத்திற னாளிகள் நலத்துறை அலு வலர் வ.சீனிவாசன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.