பட்டுக்கோட்டை, ஆக.30- தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுரையின்படி, பட்டுக் கோட்டை வட்டாரம், கொண்டிக்குளம் ஊராட் சிக்குட்பட்ட துர்கா நகரில் வசிக்கும் விளிம்பு நிலை நரிக்குறவர் இன மக்க ளுக்கு நூறு நாள் வேலை வழங்கப்பட்டது. இதில் 10 குடும்பங்களுக்கு வேலை அட்டைகளை பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) கை. கோவிந்தராசன் வழங்கினார். கொண்டிக் குளம் ஊராட்சி செயலாளர் ராஜேஸ் கண்ணன் உடனிருந்தார். வேலை அட்டை வழங்கப்பட்ட குடும்பங் களுக்கு எதிர்வரும் வாரத்திலேயே நூறு நாள் திட்ட வேலை வழங்கப்படும் எனவும், துர்கா நகரில் வசிக்கும் மீதமுள்ள குடும்பங் களின் உறுப்பினர்களிடமிருந்து ஆதார் கார்டு நகல் பெற்றும், வங்கி கணக்கு இல்லாதவர் களுக்கு வங்கி கணக்கு துவங்கிய பின்னரும், அனைத்து குடும்பங்களுக்கும் வேலை அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்ப டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் கை. கோவிந்தராசன் தெரிவித்தார்.