districts

img

3 மாதத்திற்குள் வீட்டுமனை, பட்டா, வீடு வழங்குக! மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மயிலாடுதுறை, பிப்.19 - மூன்று மாதத்திற்குள் இலவச வீட்டு மனை, பட்டா, வீடு வழங்கக் கோரி  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் மயி லாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கணேசன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.புருஷோத்த மன், மாவட்ட துணைத் தலைவர் டி. கோவிந்தசாமி, மாவட்ட இணைச் செய லாளர் எம்.சொக்கலிங்கம் மற்றும் மாவட்ட காதுகேளாத வாய் பேசாதோர்  சிறப்பு கிளைத் தலைவர் பி.ஜெயக் குமார், செயலாளர் ஆர்.மகேஷ், பொரு ளாளர் ஆர்.பிரபுதாசன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் துவக்கத்திலேயே போராட்ட களத்திற்கு வந்த மயிலாடு துறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம் பாடி வட்டாட்சியர்கள் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள், மாவட்ட முன் னோடி வங்கி மேலாளர் ஆகியோர் மூன்று கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், 20 நாட்களுக் குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.  மாற்றுத்திறனாளி உள்ள அனைத்து  குடும்ப அட்டைகளையும் ஏஏஒய் கார்டாக மாற்றி கொடுக்க வேண்டும்.  நிபந்தனையற்ற வங்கி கடனை, மாற்றுத்  திறனாளிகளை அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும். மனு அளித்து காத்தி ருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனை வருக்கும் மூன்று மாதத்திற்குள் இலவச  வீட்டுமனை, பட்டா, வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடை பெற்றது.