districts

img

திருச்சி அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தித் தருக!

திருச்சிராப்பள்ளி, மார்ச் 7- சட்டக்கல்லூரி தனி யார்மயத்தை கண்டித்து இந்திய மாணவர் சங் த்தின் திருச்சி அரசு சட்டக் கல்லூரி கிளை சார்பில் சட்டக்கல்லூரி பாதுகாப்பு மாநாடு திருச்சி சுப்பிர மணியபுரத்தில் நடை பெற்றது.  மாநாட்டிற்கு கிளைத் தலைவர் அழகுராஜா தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் ஜெனிபர் வரவேற்றார்.மாவட்ட துணைச் செயலா ளர் ஹரிராமசந்திரன்  துவக்கிவைத்துப் பேசினார். கிளைச் செயலாளர் கவின் ஆதித்யா வேலை அறிக்கை  சமர்ப்பித்தார்.  உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சம்கி ராஜ், மாநிலத் தலைவர்  சம்சீர் அகமது ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயலாளர்  ஜி.கே.மோகன்  நிறைவுரை யாற்றினார்.ஐஸ்வர்யா நன்றி கூறினார்.  மாநாட்டில் ,திருச்சிராப் பள்ளி அரசு சட்டக்கல்லூரி  மாணவர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். காஜாமலை வரை வரக்கூடிய பேருந்து களை  அரசு சட்டக்கல்லூரி வரை இயக்க வேண்டும். உள்கட்டமைப்பு மற்றும் கேண்டீன் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர் கள் சேர்க்கையை முறைப் படுத்த வேண்டும். செமஸ்டர் தேர்வுகளை சரியான காலத்தில் நடத்த  வேண்டும், உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும்.  அலுவல் மொழியாக்கக் கோரி மார்ச் 13 ஆம்  தேதி அரசு சட்டக்கல்லூரியில் போராட்டம் நடத்துவது என் பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன. புதிய நிர்வாகிகள் மாநாட்டில் புதிய நிர்வா கிகள் தேர்வு செய்யப் பட்டனர். தலைவராக கவின் ஆதித்யா, செயலாளராக அபிராமி, துணைத்தலை வர்களாக கோகுல்,சூரிய வர்மன், துணைச் செயலா ளர்களாக தொல்காப்பியன், வேல்முருகன் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.