அரியலூர், மார்ச் 3- ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, தா.பழூரில் குடி யேறி சமைத்து சாப்பிடும் போராட் டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் தா.பழூர் சிவன்கோவில் அருகே இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை 250 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவாக வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சி யர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் இந்த சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் குடியேறி, கொட்டகை அமைத்து, சமைத்து சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்தில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண் டினா, மாவட்டச் செயலாளர் இளங் கோவன், விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர்வளவன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.மணிவேல், எம்.வெங்கடாஜலம், டி.அம்பிகா, மாவட்டக் குழு உறுப்பினர் அருண் பாண்டியன், செந்தில்வேல், ஒன்றியச் செயலாளர் ராதா கிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப் பினர்கள் கே.பன்னீர்செல்வம், டி. செல்வராசு, விடுதலை சிறுத்தை கள் கட்சி மாவட்டப் பொறுப்பா ளர்கள் பாலா, குணசேகரன், தமிழ் மணி, ஒன்றிய பொறுப்பாளர் செங்குட்டுவன், நகரச் செயலாளர் செல்வம், ஒன்றிய பொறுப்பாளர் கள் கனகராஜ், பாக்கியராஜ், அழ கர், மதியழகன் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.
அப்பகுதியில் ஜெயங்கொண் டம் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலை மையிலான காவல் ஆய்வாளர்கள் தா.பழூர் ராஜேந்திரன், ஜெயங் கொண்டம் ராமராஜன், மீன்சுருட்டி பிரபாகரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட தால் பரபரப்பான சூழல் நிலவி யது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா கூறியதாவது: காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சொந்தமான நிலங்கள் சுமார் 22 ஏக்கர் நிலம் உள்ளது. அந்தப் பகுதி யில் உள்ள தலித் சமூக மக்களுக்கு இடமில்லாத நிலையில், இந்த நிலத்திலிருந்து வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சி யர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் அரசு எந்த நட வடிக்கையும் எடுக்காததால், இர வோடு இரவாக அப்பகுதி மக்கள் கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராத நிலையில், சமைத்து சாப்பிடும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். குடிமனை இல்லாத ஏழை-எளிய மக்களுக்கு இலவச பட்டா வழங்க எந்த நடவடிக்கையும் எடுக் காததால், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அப் போது, அடிமனை ரசீது கொடுப்ப தாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலை யில், அதன்பின்னர் குடியிருப்ப தற்கான எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த ஓராண்டாக தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அதிகாரிகளிடமும் மனுக்கள் அளித் தது. ஆனாலும், குடிமனை ரசீது மற்றும் கொட்டா போடுவதற்கான அனுமதி வழங்கவில்லை. ஆகை யால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த இடத்தில் குடியிருப்ப தற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த (ஓபிசி) மக்களுக்கு இடம் கொடுத்து, அடிமனை ரசீது வழங்கப்பட்டுள் ளது. ஆனால் பட்டியல் வகுப்பு மக்களுக்கு குடியிருப்பதற்கான இடம் ஒதுக்கி அடிமனை ரசீது வழங்கப்படவில்லை. உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வாலண்டினா கூறி னார். இப்போராட்டம் குறித்து அறிந்த உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா உள்ளிட்ட வருவாய்த் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், “நாளை உடை யார்பாளையம் வருவாய் கோட்டாட் சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரி களிடம் கலந்தாலோசித்து உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.” அதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இப்பகுதியில் ஏராளமான போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர்.