புதுக்கோட்டை, அக்.25 - சிறுதானியங்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துவதற்கு அரசு கடனுதவி களை வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் புதன்கிழமை புதுக் கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுசாமி பேசுகையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் எள், கடலை, மக்காச்சோளம், சாமை, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் பரவலாக சாகு படி செய்யப்படுகின்றன. ஆனால், சிறுதானி யங்களுக்கு கட்டுப்படியான விலை விவசா யிகளுக்கு கிடைப்பதில்லை. எனவே, புதுக் கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு சிறு தானியங்களை மதிப்புக் கூட்டுவதற்கான பயிற்சி அளிக்க வேண்டும். பயிற்சி பெற்றவர்களை குழுக்களாக அமைத்து, கடனுதவி வழங்கி மதிப்புக் கூட்டும் தொழில்களைத் தொடங்குவதற்கு உதவ வேண்டும். மேலும், மதிப்புக் கூட்டப் பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் அரசு உதவ வேண்டும். மேலும், கறம்பக்குடி தாலுகா மணமடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தில் நிலவும் உரத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்புக்கோ விலில் மூடப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் தொடங்க வேண்டும். மாவட்ட முழுவதும் உள்ள நீர்நிலைகளின் வரத்து வாரிகளை தூர்வாரி, மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் வாய்க்கால் ஓரங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும்” என கோரிக்கை வைத்தார். கோரிக்கைகளைக் கேட்ட மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா, ஆய்வு மேற்கொள்ளப் பட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.