புதுக்கோட்டை, ஜூலை 22 -
பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் எளிதாகச் சென்று வரும் வகையில் காலை யும், மாலையும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இந்திய மாணவர் சங்கத்தின் கந்தர்வ கோட்டை ஒன்றியப் பேரவை சனிக்கிழமை கந்தர்வகோட்டையில் நடைபெற்றது. பேர வைக்கு மாவட்ட துணைச் செயலாளர் ச.பிரி யங்கா தலைமை வகித்தார். வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜி.பன்னீர் செல்வம், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அ.சந்தோஷ்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தன் நிறைவுரையாற்றினார்.
சங்கத்தின் ஒன்றியத் தலைவராக மதன், செயலாளராக ஹரிராமகிருஷ்ணன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. இந்தப் பேரவையில் 7 கல்வி நிலையங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற னர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் எளி தாகச் சென்று வரும் வகையில் காலையும், மாலையும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். கல்வி நிலையங்களில் நிகழும் பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவி களை பாதுகாப்பதை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.