நாகப்பட்டினம்/புதுக்கோட்டை, பிப்.28- கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான, ஏழை, எளிய பொதுமக்கள், தொழிலாளிகள், விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன், நல்லதம்பி,ராமசாமி, குமார், சாத்தையா, மதியரசி, செளந்தரம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.குமாரவேல், கண்ணன், மாயழகு, நாகராஜ், துரை, மணிமேகலை, விவசாயிகள் சங்கம் ராமசாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் அவுரி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர் செயலாளர் க.வெங்கடேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ், தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல், மாவட்டக் குழு உறுப்பினர் கே.செந்தில்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.