திருச்சிராப்பள்ளி, பிப்.21- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழ கத்தில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக காலியாக உள்ள பணியிடங்களை இளை ஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சிஐடியு சார்பில் செவ்வாயன்று திருச்சி புறநகர் கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க கிளைச் செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டத் தலை வர் சீனிவாசன், சங்க பொதுச்செயலாளர் கருணாநிதி, பொருளாளர் சிங்கராயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.