வேதாரண்யம், ஜூலை 16 -
ஜூன் 12 அன்று மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இது வரை கடைமடை பகுதிகளுக்கு பாசனத்திற் கான தண்ணீர் வந்து சேரவில்லை. குறுவை சாகுபடி நேரடி விதைப்பின் மூலம் நெல் விதைத்து 15 நாட்கள் கடந்துவிட்டது. சாகு படிக்கான தண்ணீர் இல்லாததால் விதைத்த விதைகள் அப்படியே கிடக்கின்றன. எனவே கடைமடைக்கான தண்ணீரை திறந்து விடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வடக்கு ஒன்றியம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஒன்றியச் செயலாளர் ஏ.வெற்றியழகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.