புதுக்கோட்டை, அக்.19- ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியும், துணைப்பதிவாளர் பதவி உயர்வுப் பட்டியலில் குளறுபடிகளை தன்னிச்சையாக ஏற்படுத்தியும் வரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரைக் கண்டித்து புதுக்கோட்டையில் கூட்டுறவுத் துறை ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்கங்களின் புதுக்கோட்டை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி.ஏ.கே.மனோகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.வினிதா, பூங்காவனம் ஆகியோர் பேசினர். பேசினார். எம்.சுந்தரராசு மற்றும் பலர் பங்கேற்றனர்.