districts

img

நம்பியாற்றங்கரையில் செழிப்பான நாகரிகம் அகழாய்வுக்குழுவினர் தகவல்

      திருநெல்வேலி. அக் 12- நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டம் துலுக்கர்பட்டியில் நம்பியாற்றங்கரையில் 2 ஆம் கட்ட அகழாய்வுப் பணியை கடந்த ஏப்ரல்  6 ஆம் தி மாவட்ட ஆட்சியர்  கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இந்த அகழாய்வு குறித்து அகழாய்வு இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அகழாய்வு பகுதியில் 18 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வுப்பணி நடை பெற்றது. இந்த அகழாய்வில் செம்பினால் ஆன புலி உருவம், மோதிரம், யானை, தந்தத் திலான பொருட்கள்,இரும்பிலான ஈட்டிமுனை,  அம்பு முனை, குறுவாள், வளையம் மற்றும்  உளி மற்றும் சுடு மண்ணிலான சில்லுகள்,  சிறுசக்கரம் மற்றும் சதுரங்ககாய்கள் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள்,  தக்களி, கார்னி லியன் (சூது பவளம்), மணி கள், நீலக்கல் மணி, கண்ணாடி மணிகள், பளிங்கு கல்மணிகள் என 1,900-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது. மேலும் 4 தமிழ் எழுத்து பொறிப்பு கொண்ட பானை ஓடுகள், 1,800-க்கும் மேற்பட்ட குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், வெள்ளை நிறத்தினால் அலங்கரிக் கப்பட்ட பானை ஓடுகள், கருப்பு நிற பானை ஓடுகள், ஈமத்தாழிகள் என அதிக எண்ணிக் கையில் மண்பாண்ட ஓடுகள் கிடைத்து வரு கின்றன. இந்த ஆண்டு அகழாய்வில் இரும்பு  உருக்கு தொழிற்கூடம் இருந்தமைக்கான  ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதை உறுதிப் படுத்தும் விதமாக உருக்கு உலைக்கான  தளம், இரும்பு தாதுப்பொருட்கள், இரும்பு  கசடு, ஊதுலை குழாய் மற்றும் இரும்பு உளி,  வளையம்போன்ற பொருட்கள் கிடைத் துள்ளன. நம்பியாற்றின் கரையில் மேற்கொள் ளப்பட்ட களஆய்வின் மூலம் வளமான, செழிப்பான நாகரீகம் இருந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.