அமைச்சர் காரில் சோதனை
அரியலூர், மார்ச் 29- நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 24 மணி நேர மும் செயல்படக் கூடிய பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோ தனை நடத்தி வருகின்ற னர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படையினர், அரிய லூர் - ஜெயங்கொண்டம் சாலையில் அஸ்தினாபுரம் அருகே சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஜெயங் கொண்டம் நோக்கி காரில் சென்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்க ரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் எவ்வித பணமோ, பரிசு பொருட் களோ இல்லாததையடுத்து அமைச்சரின் காரை அனு மதித்தனர். அமைச்சரின் காரை சோதனை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை தொகுதி வேட்பாளர்களின் சொத்து, வழக்கு விவரம்
தஞ்சாவூர், மார்ச் 29- தஞ்சை தொகுதியில் போட்டியிடும் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்க ளின் சொத்து மற்றும் வழக்கு விவரங்கள் வெளி யாகியுள்ளன. தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் ச.முர சொலி தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில், கொரோனா காலத்தில் கிராம சபைக் கூட்டம் நடத்தியது, அனுமதி யின்றி பதாகை வைத்தது, தடையை மீறி போராட்டத் தில் ஈடுபட்டது என மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நடவ டிக்கை கைவிடப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவரது சொத்து விவரத்தில், தனது பெயரி லும், தன் மனைவி பெயரி லும் உள்ள அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.2.07 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக வேட்பாளர் பெ.சிவநேசன் மீது எந்த வித குற்ற வழக்கும் இல்லை என அவர் உறுதிமொழிப் பத்திரத்தில் தெரிவித்துள் ளார். இவர் சொத்து விவ ரத்தில் தன் பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ.1.40 கோடி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.ஐ.ஹூமா யூன் கபீர் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில் ரூ.2.05 கோடி சொத்து இருப்பதாக தெரிவித் துள்ளார்.
தஞ்சை ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வறைகள் திறப்பு
தஞ்சை ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வறைகள் திறப்பு தஞ்சாவூர், மார்ச் 29- தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் புனரமைக்கப்பட்ட பயணி கள் ஓய்வறைகள் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பயன் பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் வகையில் ஓய்வறைகள் ஏற்கனவே தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த ஓய்வறை கள் மழைக்காலங்களில் ஆங்காங்கே மழைநீர் கசிந்து பழுதா னது. இதையடுத்து, அதை புனரமைக்கும் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்றன. புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இதன் பராமரிப்பை ஐஆர்சிடிசி நிர்வாகத்திடம், தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்படைத்தது. அதன்படி, புனரமைக்கப்பட்ட 10 குளிரூட்டப்பட்ட அறை களை வெள்ளியன்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் திறந்து வைத்தார். அதேபோல் தஞ்சாவூர் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பில் புதிதாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து தெருமுனைக் கூட்டம்
திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து தெருமுனைக் கூட்டம் தஞ்சாவூர், மார்ச் 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நகர நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கட்சியின் பேராவூரணி ஒன்றியச் செய லாளர் கொன்றை வே.ரெங்கசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான கோ.நீலமேகம், சட்ட மன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர், மூத்த தலைவர் ஆர்.சி.பழனிவேலு, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செய லாளர் (பொ) ஆர்.எஸ்.வேலுச்சாமி, மூத்த தலைவர் வழக்குரைஞர் வீ.கருப்பையா ஆகியோர் பேசினர். இதில், “தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலி வெற்றிக்காக தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது, பொதுமக்களைச் சந்தித்து துண்டுப் பிர சுரங்கள் வழங்குவது, அனைத்து அணிகளும் திமுக கூட்டணி வெற்றிக்காக பாடுபடுவது” எனத் தீர்மானிக்கப் பட்டது.
கரூர் தொகுதியில் ஆவணங்கள் இல்லாத ரூ.1.35 கோடி பணம் பறிமுதல்
கரூர், மார்ச் 29 - கரூர் மக்களவை தொகு திக்குட்பட்ட கரூர் மாவட்ட பகுதியில் உரிய ஆவணம் இன்றி இதுவரை பறக்கும் படைகள் மூலம் ரூ.83,63,818, நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் ரூ.52,13, 766 என மொத்தம் ரூ.1,35,77, 584 மதிப்பிலான தொகை மற்றும் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. மக்களவை பொதுத் தேர்தல் நடத்தை விதிமுறை கள் அமலில் உள்ளதால், வாகனங்களில் உரிய ஆவ ணங்கள் இல்லாமல் பணம், பரிசுப்பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கரூர் மாவட்டத்தில் பறக்கும் படையினரும், நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழு வினரும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் வெள்ளியன்று கரூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஒரு வாகனத்தில் ரூ.3,20,840, குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட பகுதியில் ஒரு வாக னத்தில் ரூ.92,960 என 2 வாக னங்களில் மொத்தம் ரூ.4, 13,800 பறக்கும் படைகள் மூல மாகவும், நிலையான கண்கா ணிப்பு குழுக்கள் மூலம் பறி முதல் செய்யப்பட்ட பணம், உரிய கருவூலத்தில் பாது காப்பாக ஒப்படைக்கப்பட்டது. இதுவரை பறக்கும் படைகள் மூலம் ரூ.83,63,818, நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் ரூ.52, 13,766 என மொத்தம் ரூ.1,35, 77,584 மதிப்பிலான தொகை மற்றும் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் செயல் படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு, இதுவரை சி-விசில் செயலி மூலம் 201 புகார்களும், தொலைபேசி மூலம் 15 புகார்களும் என 216 புகார்கள் வரப் பெற்று நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
‘பன்முக நோக்கில் தமிழும் ஆசிய இலக்கியங்களும்’ தஞ்சையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
தஞ்சாவூர், மார்ச்.29 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், மொழிபெயர்ப்புத் துறை யில் “பன்முக நோக்கில் தமிழும் ஆசிய இலக்கியங்களும்” என்ற தலைப்பில், வளர்தமிழ்ப் புலத்தில் உள்ள கருத்த ரங்கக் கூடத்தில் பன்னாட்டுக் கருத்த ரங்கம் நடைபெற்றது. விழாவின் துவக்கமாக, மொழி பெயர்ப்புத் துறையின் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் இரா.சு.முருகன் வரவேற்றார். தொடர்ந்து, மொழி பெயர்ப்புத் துறையின் இணைப் பேரா சிரியர் மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப் பாளர் சௌ.வீரலெஷ்மி அறிமுக உரையாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதி வாளர் முனைவர் சி.தியாகராஜன் தலைமை வகித்துப் பேசினார். வளர் தமிழ்ப் புல முதன்மையர் இரா.குறிஞ்சி வேந்தன் வாழ்த்திப் பேசினார். மொழி பெயர்ப்புத் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் த.மீனாட்சி நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து அமர்வுகளில் முதலாவதாக ‘ஆசிய மொழியியல்’ என்ற தலைப்பில் தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் தமிழ் ஆய்விருக்கையின் ஆய்வுத் தகைஞர் பேராசிரியர் ந.நட ராசப்பிள்ளை, தொடர்ந்து ‘மலேசியப் புலம்பெயர் இலக்கியங்கள்’ என்ற தலைப்பில் வளர்தமிழ்ப் புலத்தின் புல முதன்மையர் பேராசிரியர் இரா.குறிஞ்சிவேந்தன், ‘அரபு இலக்கியங்க ளில் சமயத் தாக்கம்’ என்ற தலைப்பில் சென்னை பல்கலைக்கழக அரபு மொழித் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் அ.ஜாகிர் ஹுசைன் ஆகி யோர் கருத்துரை ஆற்றினர். அவரைத் தொடர்ந்து ‘ஜைனப் பண்பாட்டுப் புரட்சியும் இலக்கியப் போக்குகளும் - ஓநாய் குலச்சின்னம் நாவலை முன்னிலைப்படுத்தி’ மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப் புறவியல் துறை மேனாள் துறைத் தலைவர் பேராசிரியர் இ.முத்தையா, ‘ஆசிய மொழிகளில் நாட்டார் மரபு’ என்ற தலைப்பில் இணைய வழியாக லண்டனைச் சேர்ந்த அனாமிகா பண்பாட்டு மைய பேராசிரியர் பால.சுகுமார் கருத்துரை ஆற்றினர். மேலும் ‘சப்பானியப் புனைகதை கள்’ என்ற தலைப்பில் திண்டுக்கல் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த கவிஞர் யவனிகா ஸ்ரீராம், ‘தமிழில் சென் கவிதை மரபு’ என்ற தலைப்பில் மொழி பெயர்ப்புத் துறையின் இணைப் பேரா சிரியர் சௌ.வீரலெஷ்மி ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வின் இறுதியாக மாணவர் களுக்கு தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் சான்றிதழ்களை வழங்கினார்.
மயிலாடுதுறை தொகுதியில் 17, தஞ்சை தொகுதியில் 13 வேட்பு மனுக்கள் ஏற்பு
மயிலாடுதுறை/தஞ்சாவூர், மார்ச் 29 - மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சிய ருமான ஏ.பி.மகாபாரதி தலைமையில், தேர்தல் பார்வையாளர் (பொது) கன்ஹூ ராஜ் ஹச் பகதே முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடை பெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர். சுதா, அதிமுக வேட்பாளர் பாபு, பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின், நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இளஞ்செழி யன், சாமானிய மக்கள் கட்சி வேட்பா ளர் கார்த்திக், அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழக வேட்பாளர் வேதரத்தினம், நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் நித்தியானந்தம் மற்றும் 9 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இரண்டு சுயேச்சை வேட்பாளர்க ளின் மனுக்கள், அரசியல் கட்சி வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் வேட்பு மனுக்கள் உட்பட 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தஞ்சாவூர் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி யில் 13 வேட்பாளர்களின் வேட்பு மனுக் கள் ஏற்கப்பட்டன. 23 வேட்பு மனுக் கள் நிராகரிக்கப்பட்டன. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி யில் திமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்பட 31 பேர், 36 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை மாவட்ட ஆட்சியர கத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் தலைமையிலும், தேர்தல் பொது பார்வையாளர் ஒய்.கிகேட்டோ சேம, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாக ராஜன், கோட்டாட்சியர் செ.இலக்கியா ஆகியோர் முன்னிலையிலும் வியாழக் கிழமை நடைபெற்றன. இதில், திமுக ச.முரசொலி, பாஜக கருப்பு எம்.முருகானந்தம், தேமுதிக பெ.சிவநேசன், நாம் தமிழர் கட்சி எம்.ஐ. ஹூமாயூன் கபீர், பகுஜன் சமாஜ் கட்சி ஏ.ஜெயபால், சுயேச்சையாக போட்டியிடும் 8 வேட்பாளர்கள் உட்பட 13 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட் டன. மீதமிருந்த 23 மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற, சனிக்கிழமை (மார்ச் 30) கடைசி நாள். பின்னர், மாலையில் இறுதிப் பட்டி யல் வெளியிடப்படும்.
தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து பிரச்சாரம்: சிபிஎம் முடிவு
தஞ்சாவூர், மார்ச் 29- திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு மற்றும் முன்னணி ஊழியர்கள் பங்கேற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை கட்சியின் பூத லூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரி சாமி துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், திருவையாறு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான என்.வி.கண்ணன் நிறை வுரையாற்றினார். பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ், தஞ்சை ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி, திருவையாறு ராமு ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர். இக்கூட்டத்தில், “தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ச.முரசொலியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது. தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது. வீடுகள் தோறும் துண்டுப் பிரசுரம் கொடுத்து வாக்குச் சேகரிப்பது. ஏப்.2 இல், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்தல் பரப்புரையை தொடங்கும் புதுக் குடியில் இருந்து, தொகுதி முழுவதும் பிரச்சாரத்தில் பங்கேற்று வாக்குச் சேகரிப்பது. ஏப்.4 அன்று கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பரப்புரை, ஏப்.9 அன்று வேட்பாளர் முரசொலி பரப்புரை ஆகியவற்றில் கட்சியினர் திரளாக பங்கேற்பது” எனத் தீர்மானிக்கப் பட்டது.
சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலை.யில் ‘தீட்டா 24’ தேசிய தொழில்நுட்ப மேலாண்மைத் திருவிழா
கும்பகோணம், மார்ச் 29- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாஸ்த்ரா நிகர் நிலைப் பல்கலைக்கழக சீனிவாச இராமானுஜன் மையத் தில், ‘தீட்டா 24’ என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப மேலாண்மைத் திருவிழா வெள்ளியன்று தொடங்கியது. மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய 3 நாட்களுக்கு நடை பெறும் இந்நிகழ்வை சிறப்பு விருந்தினர் திருச்சி ஆகர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனர் மற்றும் இயக்குநர் ரவிசங்கர் ராஜகோபாலன் துவக்கி வைத்து உரையாற்றினார். அவர், “அனைத்து துறைகளிலும் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்படும் தாக்கம் பற்றியும், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப பயன்பாடுகள் குறித்தும் அதில் பயிற்சி எடுப்பதன் மூலம் மாணவர்கள் பெறக்கூடிய வேலைவாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். இத்தகைய தொழில்நுட்ப மேலாண்மைத் திருவிழா பல்துறைகளிலும் மாணவர்க ளின் தலைமைப் பண்பு மேம்பாடு அடைய உதவுகிறது” என்றார். தொடர்ந்து மின்னியல், மின்னணுவியல், மேலாண்மை, கணிதம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், நுண்ணு யிரியல், குறும்படம், எந்திரவியல் ஆகிய 11 பிரிவுகளில் 55- க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழ கங்கள் மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1.50 லட்சம் பரிசாக வழங்கப் பட உள்ளது. முன்னதாக, தீட்டா மாணவர் செயலாளர் தீபக்ராஜ் வர வேற்றார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சீனிவாசன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். இராமா னுஜன் மையப் புலத்தலைவர் இராமசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நினைவுப்பரிசை வழங்கினார். துணை மாணவர் செயலாளர் ஐஸ்வர்யலெட்சுமி, இந்தாண்டுக் கான தீட்டா நிகழ்வுகளை பற்றி விளக்கினார். துணை மாண வர் செயலாளர் சூர்யா நன்றி கூறினார்.