districts

img

அரசுப் பள்ளிகளை ஊக்குவிக்கும் 18 புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா

திருவாரூர், ஆக.18-

        அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க வும், மாணவர் சேர்க்கையை அதிகப் படுத்தவும் புது உத்தியை உருவாக்கி யுள்ளார் திருவாரூர் மாவட்டம் குட வாசல் ஒன்றியத்திற்குட்பட்ட 18 புதுக் குடி ஊராட்சித் தலைவர் திவ்யா.

      இது தொடர்பாக 77-ஆவது சுதந்திர தினத்தன்று புதுக்குடி ஊராட்சி நிறை வேற்றியுள்ள தீர்மானம் குறித்து நமது  செய்தியாளரிடம் திவ்யா கூறுகை யில், “குடவாசல் ஒன்றியம் 18 புதுக்குடி  ஊராட்சியில் உள்ள ஒன்றியத் துவக்கப் பள்ளியில் நடப்பாண்டில் சேர்ந்துள்ள மற்றும் சேரவுள்ள மாணவர்கள் வீடு களின் சொத்துவரி மற்றும் குடிநீர் வரிக்கு விலக்கு அளிப்பது எனத் தீர்மா னம் நிறைவேற்றியுள்ளோம். மாண வர்கள், அவர்களது பெற்றோரை ஊக்குவிக்கும் வகையில் வரி விலக்கு குறித்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டில் 16  மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ள னர். இவர்களது வீட்டின் வீட்டு வரி  மற்றும் குடிநீர் வரி எனது சொந்த செல வில் நடப்பாண்டு முதல் நான் பதவியில் இருக்கும் காலம் வரை ஊராட்சிக்கு  செலுத்தப்படும். நிலுவை வரிபாக்கி செலுத்தப்படாது. மேலும் மாணவர்கள் சேர்ந்தால் அவர்களது வீடுகளுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படும் என்றார்.