► திருவாரூர் மாவட்டம் பாமணி யில் தூத்தநாக சல்பேட் உற்பத்தி மையம் ரூ. 5 கோடியில் அமைக்கப்பட உள்ளது.
►புதுக்கோட்டை மாவட்டத்தில் இடங்களில் சிட்கோ மூலம் தொழிற் பேட்டை அமைக்கப்பட உள்ளது. தவிர விருதுநகர், திநெல்வேலி, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலும் அமைகிறது.. மொத்தம் 6,200 புதிய வேலை வாய்ப்பு கள் உருவாக்கப்படுகிறது.
►அரியலூர் மாவட்டத்தில் 3,400 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட நவீன சேமிப்புக் கிடங்கு கட்டப்பட உள்ளது.
►ரூ.5 கோடியில் இரண்டு புதிய வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் கட்டப்படும். இதில் ஒன்று மற்றொன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடங்கு, உலர்களம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கட்டப் படுகிறது மற்றொன்று சேலத்தில் அமை கிறது.
►திருச்சிராப்பளியில் ரூ.60 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமைகிறது.
►நாகப்பட்டினம் மாவட்டத் தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
►ரூ.2.80 கோடி மதிப்பில் மண்புழு உர உற்பத்தி மையங்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட உள்ளது. இதில் ஒன்று திருவாரூர் மாவட்டம் பாம ணியிலும் மற்றொன்று திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டிலும் அமைகிறது.
►அரியலூர் மாவட்டத்திலுள்ள சிமெண்ட் தொழிற்சாலையைச் சுற்றி ரூ. 4 கோடி மதிப்பில் புதிய சுற்றுச்சுவர் கட்டப் பட உள்ளது.
►தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்க ளில் கடன் பெறும் வயது உச்சவரம்பு 60-லிருந்து 70 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
►கூட்டுறவு வங்கிகளின் மூலம் ஊதியம் பெறும் பணியாளர்கள், ஓய்வூதி யதாரர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்கக் கடன் வழங்கப்படும். வாகனத் தின் விலையில் 90 சதவீதம் கடனாக வழங் கப்படும் என சட்டசபையில் அறிவிக் கப்பட்டுள்ளது.
►கூட்டுறவு வங்கிகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனை வாங்க கடனுதவி செய்யப்படும். மற்ற வங்கி களை விட குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.