பாதித்தவர்கள் புகார் அளிக்க கோரிக்கை
தஞ்சாவூர், ஏப்.18- தஞ்சாவூர் மாவட்டப் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த சங்கமம் பெனிபிட் பண்ட் நிறுவனத்தின் கும்பகோணம் கிளை யில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முத லீட்டு திட்டங்களில் பணங்கள் பெற்றும், நிரந்தர வைப்பு நிதி திட்டத்திலும் பணத்தை பெற்றும் அவற்றை திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டதாக கும்பகோணம் நாகேஸ்வரன், வடக்குத் தெருவை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜோசப்சாமி கொடுத்த புகார் மீது கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு திருச்சிராப்பள்ளி பொரு ளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாறுதல் செய்யப் பட்டுள்ளது. தற்போது வழக்கு தஞ்சாவூர் பொருளாதாரக் குற்றப்பிரிவின் புலன் விசார ணையில் இருந்து வருகிறது.
எனவே இந்த வழக்கில் சங்கமம் பெனிபிட் பண்ட் நிறுவனத்தில் தஞ்சாவூர் மாவட் டத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் யாரேனும் முதலீடு செய்து, முதலீட்டு தொகையை திருப்பி தரப்படாமல் ஏமாற்றப்பட்டிருந்தால் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி சாலை, 57-பி ராஜப்பா நகர் முதல் தெருவில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு, டிஎஸ்பி அலுவ லகத்தில் நேரில் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி புகார் கொடுக்கலாம் எனத் தெரி விக்கப்பட்டது.