கும்பகோணம், ஏப்.1- தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக சீனிவாச இராமானுஜன் மையத்தில், தீட்டா 24 என்ற தேசிய அளவி லான தொழில்நுட்ப மேலாண் மைத் திருவிழா மார்ச் 29 முதல் 3 நாட்களுக்கு நடை பெற்றது. இந்நிகழ்வை திருச்சி ஆகர் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப நிறுவனர் மற்றும் இயக்கு நர் முனைவர் ரவிஷங்கர் ராஜ கோபாலன் தொடங்கி வைத் தார். மின்னியல், மின்னணு வியல், மேலாண்மை, கணிதம், கணினி அறிவியல், உயிர் வேதி யியல், நுண்ணுயிரியல், குறும் படம், எந்திரவியல் உள்ளிட்ட 11 பிரிவுகளில் 55-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடை பெற்றன. இப்போட்டிகளில் பல்வேறு பல்கலைக்கழ கங்கள் மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்வின் 2 ஆம் நாளில் ‘எமல்சன்’ என்ற தலைப்பில் குறும்படம், புகைப்படம் மற்றம் விளம்பரம் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், சிறந்த படைப்புகளை இயக்கு நர் தாம்ஸன் தேர்ந்தெடுத்தார். பேராசிரியர் இராமச்சந்திரன் தலைமையில் சிறப்பு பட்டி மன்றம் நடைபெற்றது. இறுதி நாளில் கும்ப கோணம் ஸ்ரீ ராமவிலாஸ் சர்வீஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பிரபாகரன் சிறப்பு விருந்தின ராக பங்கேற்று வெற்றி பெற்ற வர்களுக்கு ரொக்கப் பரிசு களை வழங்கினார். ஒருங்கி ணைப்பாளர் சீனிவாசன் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். சீனிவாச இராமா னுஜன் மைய புலத்தலைவர் இராமசாமி தலைமை உரை யாற்றினார். மாலை மொட்டை மாடி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.